மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2014

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!


மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர் சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) வி. வாசுதேவன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் 32 ( MIS ) பணியாளர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால், வெளி முகமை (Outsourcing) முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி :
MBA(HR) / MSW(HR), MA(Personnel Management)-(நேரிடையாக முழுநேர கல்வி பயின்றவர்கள் மட்டும்.)

வயது வரம்பு :
24 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.

வேலைவிவரம்:
வேலை நாடுநர்களுக்கு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வது, தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது.

முன் அனுபவம்:
2 ஆண்டுகளுக்கு குறையாமல் மனிதவளத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். மாத ஊதியம்- ரூ.20,000 (தொகுப்பூதியம்) மேற்காணும் தகுதியுடையோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை
எண்.42,
ஆலந்தூர் ரோடு,
ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
கிண்டி,
சென்னை. 600 032 -என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு அஞ்சல் மற்றும் ovemcl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக (26.7.2014) சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்துக்குள் சென்று பார்வையிடலாம்.

3 comments:

  1. temproreya permanenta

    consolidated salarya?


    tet unda 5% relaxation unda

    ReplyDelete
  2. பெருந்தலைவர் காமராசர் !

    தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

    மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

    சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

    மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

    பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!

    இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்.

    காமராஜரை போன்ற தலைவா்கள் இருந்த தமி்ழ்நாடா இது இப்போது தலைவா்களுக்கு தட்டுப்பாடா?


    காமராஜரை போன்ற தலைவா்கள் இருந்த தமி்ழ்நாடு சட்டசபையா இன்று
    இவா்களிடம் மாட்டிக்கொண்டு அம்மாம்மா அம்மாடி அம்மம்மா

    ReplyDelete
  3. download anyone tamil type writter .
    change the language setting to tamil.
    now tamil type writter is ready .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி