'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.


மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே, மேலவையில் தெரிவித்தார்.
மேலவையில், கேள்வி நேரத்தில், சங்கனூரா (பா.ஜ.,) கேள்விக்கு, பதிலளித்து, அமைச்சர்தேஷ்பாண்டே கூறியதாவது: விரிவுரையாளர்களை, கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமாக, நியமனம் செய்து கொள்ள வேண்டாம் என, தீர்மானித்துள்ளதால், சி.இ.டி., மூலமாகவே, நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள் துவங்கப்பட்டது.மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி.,நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது.இது தொடர்பாக, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் 238 பேராசிரியர்கள், சீனியாரிட்டி அடிப்படையில், கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 200 பேர் பணிக்கு ஆஜராகி விட்டனர். கல்லூரி முதல்வர் பதவிகளை, நேரடியாக நியமித்து கொள்வது தொடர்பாக, பரிசீலிக்கப்படுகிறது. இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்து, 50 சதவீத பதவிகளை, நேரடி நியமனம் மூலமாகவும், மீதமுள்ள, 50 சதவீதகல்லூரி முதல்வர் பதவிகளை, பதவி உயர்வு மூலமாகவும் நியமித்து கொள்ளப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி