பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்.


பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.
மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமைவகித்து மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் பேசியது:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா உபகரணங்கள், பாடப் புத்தகங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் கண்டிப்பாக தமிழ் பாடம் கற்பிக்கச் செய்ய வேண்டும்.
முறையாக தமிழ் பாடம் மாணவ, மாணவியருக்கு கற்பிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

வரும் கல்வியாண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க பயிற்சி கொடுக்க வேண்டும். 6,7,8-ம் வகுப்புகளில் இருந்தே இந்தப் பயிற்சியைத் துவக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆஞ்சலோ இருதயசாமி (மதுரை), ஜெயக்குமார் (விருதுநகர்), கஸ்தூரிபாய் (திருநெல்வேலி), ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி