ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நான்கு மண்டலங்களில் இன்று துவக்கம் - தினமலர்

ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில் இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும் செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது.

விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள் இப்பணி நடக்கிறது.

பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்ற சான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.

5 comments:

  1. PAPER-2 க்கு இரண்டாம் தேர்வு பட்டியல் வருமா? .தகவல் தெரிந்த நண்பர்கலே கூறுங்கள்

    ReplyDelete
  2. If anyone go to correction centre please share ur experience about Tamil medium claimed related needed things

    ReplyDelete
  3. pls guide me anyone, how to reach viluppuram correction center from T.malai

    ReplyDelete
  4. I m asma BCM 5% RELAXATION 1PAPER TOTAL CANDIDATES 324 ONLY....65 ABOVE WEIHHTAGE KU JOB CONFIRM IT'S 100% TRUR...
    BY
    ASMA
    TIRUPUR

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி