அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது? தினமலர் நாளிதழ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2014

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது? தினமலர் நாளிதழ்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

நடப்பு கல்வியாண்டில்: தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில், ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன.


 அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. 'அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டு வருவது போல், அரசு உதவி பெறும் பள்ளியிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், 'அரசு தரப்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது' என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள்,அதிருப்தியில் உள்ளனர்.

14 லட்சம் மாணவர்கள்: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 5,071 தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.

அரசு பள்ளியை போலவே, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி தேவை என, அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.

கடந்த, 1990 - -91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது.தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. மேலும், அரசு பள்ளிகளே தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் ஏக்கம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட பொருளாளர் ராமராசு கூறியதாவது:அரசு பள்ளிகளை போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குழந்தைகள், தங்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு கிடைக்குமா என, ஏங்கி உள்ளனர்.

அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளதால், மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

95 comments:

  1. Replies
    1. தி தமிழ் ஹிந்து: Facebook page:
      கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.

      ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.

      ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.

      பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது..

      Delete
    2. மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.

      இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.

      மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்

      Delete
    3. மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.

      கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

      ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.

      மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.

      Delete
    4. Bashaa. ..
      Maanik baasha..
      இந்த antony ய (Trb) பத்தி தப்பா பேசறயா.?
      சுட்டுறுவேன்..
      இப்பவே சுட்டுறுவேன். .
      ரெங்கசாமி சொல்லு உன்னை புள்ளக்கு..

      Delete
    5. இது தான் வஞ்சப்புகழ்ச்சி அணியோ!!!!!!!!!!. அருமை....

      Delete
    6. வஞ்சப்புகழ்ச்சியா பாஷா பாய்?

      Delete
    7. இவ்வளவு மன உளைச்சலிலும் இந்தக்கட்டுரையைப் படித்ததும் சிரித்துவிட்டேன். நன்றி பாஷா

      Delete
    8. Dear Alexander Solomon Sir...

      Very happy friendship day wishes to u sir...

      Delete
    9. அருமையாக உள்ளது

      Delete
    10. Thank you Mr / Mrs Anonymous and wish you the same

      Delete
    11. நன்றி...:-)
      ____/\____

      Delete
    12. ஏய் ஏய் ஏய்...:-D
      இந்த பாஷா மாணிக் பாஷா பத்தி உனக்கு தெரியாது...:-D
      Nee yepadi yenna kalaaichu super'nu comment vanguniyoo,
      Athe maari naanum una kalaaichu Very Super'nu comment vangalaa...
      Yen peru manik baashaa illa....:-D

      Dadadan dadaaaan..
      Dadadan dadaaaan....
      (Yenna puriualaya... Background music:-D:-D:-D

      Delete
    13. என்ன பாஷா பாய்...நீ நம்ம ரெங்கசாமி புள்ளயாச்சே.! அதனால தான் விட்டு வெச்சன்.....ஆனா முடிச்சிடறேன். .முடிச்சிடறேன். . இன்னும் எண்ணி ஏழே வருசத்துல process ய முடிச்சிடறேன். .கொஞ்சம் அங்க பாரு..
      (கொரட்ட சத்தம் கொர்ர்..கொர்ர்)

      Delete
    14. Bombay theatre'la saduranga vettai padam poduranganu notice ottiruku but inga SUPERSTAR'in BAATSHA padam'la oduthu

      Delete
  2. Hai friends, Happy friendship day to all

    ReplyDelete
  3. Friends! I am new to kalviseithigal. But i read daily all your comments. I am History major my wt.63.58 BC Woman. Some persons are sharing many matters in nice way. Especially Mr. Maniyarasan sir, Mr. sri only for u sir, and Mr.Rajalingam. I Appreciate your writing. You are sharing, analysing and writing in superb way. Thank u for ur sharing. WISH U HAPPY FRIENDSHIP DAY.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தங்களை கல்விச்செய்தியின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்....
      நண்பர்கள் தின இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.....

      Delete
    2. Thank u sir for ur kind response

      Delete
    3. welcome to kalviseithi madam.Happy friendship Day.

      Delete
  4. நாளையும் இறுதி பட்டியல் வெளியாவது சந்தேகமாக உள்ளது. எஜி வழக்கு நிழுவையில் உள்ளதாலும் மற்றும் வழக்குகளின் தீர்ப்புக்கு இறுதி பட்டியல் உட்பட்டது என்பதாலும் எஜி இறுதி பட்டியல் வெளியிட தயக்கம் தெரிவித்திருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. திருப்பதில வழக்கமா லட்டு தான தருவாங்க.. ஒருவேள சந்திரபாபுநாயுடு அல்வா குடுக்க சொல்லிட்டாரோ??

      Delete
    2. OBJECTION YOUR HORNOUR

      சூரியன் உதிப்பதோ கிழக்கு...
      சுந்தரி அளப்பதோ வழக்கு...
      சும்மா இருக்கும் மாட்டை
      உழவுக்கு பழக்கு...........

      சூடு பறக்கப் போகுது
      G.O 71 வழக்கு.............

      Delete
    3. Vanthutaruya vairamuthu vaarisu.

      Delete
  5. எங்களை மறந்தது ஏன்? RAB-BAKSHA
    நாங்களும் ஒரு ஆண்டாக முதுகலை ஆசிரியர் தேர்வு எழுதி இறுதி பட்டியலுக்கு காத்து கொண்டு இருக்கிறோம்.தினமும் ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றி மட்டுமே இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகள் செய்தி
    வெளியிடுகின்றன. எங்களை அனைவரும் மறந்தே விட்டனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலுக்கு காத்து இருப்பவர்களை விட மிகவும் கொடுமையானது எங்கள் நிலைமை.

    எங்களுடன் தேர்வு எழுதிய தமிழ் நண்பர்கள் பணியில் சேர்ந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

    முதலில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி வந்தனர். இப்போது தான் வழக்குகள் முடிந்து விட்டது. தீர்ப்புகளும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

    பின்னர் எதற்கு இந்த காலதாமதம்?

    ஏன் எங்களுக்கு இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்?
    தமிழ் பாடத்திற்கு அவசரமாக இறுதி பட்டியல் வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏன் இதுவரை வழக்குகள் முடிந்து தீர்ப்புகளும் வெளியிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு இறுதி பட்டியல் வெளியிட தயக்கம் காட்டி வருகிறது?

    தமிழுக்கு மட்டும் பணிநியமனம் தர முடிவு செய்தவர்கள் எதற்கு மற்ற பாடங்களுக்கு தேர்வு வைத்தார்கள்?

    பதில் சொல்ல வேண்டியவர்கள் "புராசஸ் கோயிங் ஆன்" என்கிறார்கள்.

    என்று தான் எங்களுக்கு விடிவு காலம் வருமோ

    ReplyDelete
  6. இறுதி பட்டியல் வெளியிட என்றுதான் இவர்களுக்கு மனம் வருமோ???/

    ReplyDelete
    Replies
    1. நாளை வருகிறாள் மீனாக்ஷி!

      Delete
    2. உண்மையாகவா??

      Delete
    3. நம்புவோம் நம்பிக்கை தான் வாழ்க்கை.

      Delete
    4. திரு.மணியரசன் அவர்களின் மீனாக்ஷிக்கு பொருளென்னவோ ?!!!!

      Delete
    5. 10000 பேர தேர்வு செய்வது இவர்களுக்கு இத்தனை மாதங்களா.. மேனுவலா செக் பண்ண அவங்களுக்கு கடைசி நாள் தான் ஞானோதயம் வந்துச்சா.. சரி 2 நாள் சரிபார்த்து நாளைக்காவது போட்டால் நல்லது. இதற்க்காகவே 1 வருடமாக வரன் பார்க்காமல் வேலை என்னாச்சு, எப்ப கல்யாணம்னு கேக்குறவங்கள சமாளிக்க முடியல.

      Delete
    6. A ALEXANDER SOLOMON Aas sir,

      உண்மைதான்.என் மீனாக்ஷி நாளை கண்டிப்பாக வருவாள்.அது மட்டுமே என்னால் உறுதியாக சொல்ல முடியும்.மீனாக்ஷி என்ற சொல்லுக்கு selection list என்ற பொருளில் கேள்வி கேட்டால் அதற்கு என்னால் உத்தரவாதம் தர முடியாது. வர வாய்ப்பு அதிகம் அவ்வளுதான்.

      Delete
    7. விரைவில் வரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.

      Delete
    8. oh! மீனாக்ஷியை மையமாக வைத்து ஒரு சிறு கவிதை எழுதியுள்ளேன்.அதனை குறிப்பிடும் பொருட்டும் நான் விசாரித்தவரை நாளை selection list வர 90% வாய்ப்பு என்றார்கள் இதனை குறிப்பிடும் பொருட்டும் அவ்வாறு எழுதியுள்ளேன்.மேலே உள்ள பதிலை எழுதுவதற்குள் இவ்வளவு கேள்விகள் வந்துவிட்டது.

      Delete
    9. மீனாக்ஷி வரவேண்டும். நல்ல செய்தி தரவேண்டும் ...

      Delete
    10. மீனாஷீ... மீனாஷீ.......
      FINAL LIST என்னாச்சி......

      EXAM எழுதி நாளாச்சி..............

      1 வருஸம் வீனாச்சி...........

      Delete
    11. மதுரை சென்று வந்ததன் பிரதிபலிப்பா மீனாக்ஷி ???/

      Delete
    12. திரு மனியரசன் அவர்களே.

      நாங்களெல்லாம் TRB மற்றும் Selection List-ஐ மறந்து இரண்டு நாட்களாகிவிட்டன. அது வரும்போது வரட்டும். மீனாஷீ தரிசனத்திற்க்காகத் தான காத்திருக்கிறோம்.

      Delete
    13. mani sir first meenakshi vanthu arul katita apparam kamatchi than kedimelam thanu solungo. ok ok all the best for meenachi &kamachi.

      Delete
    14. வாழ்த்துக்கள் மணியரசன்

      Delete
    15. மேலே உள்ள comments களுக்கு வரிசையான பதில்கள்.

      1)மீனாக்ஷி வருவாள்.நிச்சயம் நல்ல பலனைத் தருவாள்.

      2) Timing super sir. தற்போது நம் கல்விசெய்திவலைதளத்தில் நகைச்சுவை அதிகரித்து விட்டதோடு தரமானதாகவும் உள்ளது.கடந்த ஓராண்டு காலமாக comments எழுதி எழுதியே வசனம் எழுதுவதிலும்,நகைச்சுவை துணுக்கு எழுதுவதிலும் கைத்தேர்ந்தவர்களாகிட்டோம்.

      அளவில் மிஞ்சும் போது அமுதமும் நஞ்சாகும் என்பார்கள்.
      அதேபோல் கோபம் மிஞ்சும் போதும் அது நாகையாக மாறுமோ?

      3)நிச்சயமாக அவளை தரிசித்ததன் தாக்கம்தான் உஷா madam.

      4)நாளை என் மீனாஷியோடு, அந்த மீனாக்ஷியும் வருவாள்.இருவரின் தரத்தையும் நடுநிலையோடு விமர்சனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் Aas sir.

      5)Liteshkrishna RP madam, எங்கள் வீட்டில் ஏதாவது ஒட்டு கேட்கும் கருவி பொருத்தி உள்ளீர்களா? எப்படி இவ்வளவு சரியாக உங்களால் யூகம் செய்ய முடிந்தது?

      6)Usha madam, நீங்கள் கூறிய வாழ்த்துகள் மீனாக்ஷிக்கா? இல்லை காமாட்சிக்கா?

      Delete
    16. With pleasure Mr Maniarasan. Congratulation.

      Delete
    17. வாழ்த்துக்கள் நண்பரே... அநேகமாக நாளை உங்களுக்கு இரண்டு நல்ல மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும்....

      Delete
    18. அந்த ரெங்கநாதரை போல ஸ்ரீதேவி (மீனாக்ஷி ) மற்றும் பூதேவி (காமாட்சி ) யுடன் வாழ வாழ்த்துக்கள் என்வாழ்த்து இருவருக்கும் உரியது .

      Delete
    19. Hello USHA Mam , உங்களுக்கு தெரியாமல் எதையும் இங்கு பதிவிடவேண்டாம் மீனாட்சி அம்மன் தான் ஸ்ரீதேவி
      என்று தெரியுமா? அவர் ரெங்கநாதரின் சகோதரியே ,
      ஸ்ரீதேவி வேறு மீனாட்சி அம்மன் வேறு .... So உங்களது பதிவை நீக்குங்கள்(அ)திருத்தம் செய்யுங்கள் உடனடியாக...்

      Delete
    20. மணியரசன் சார்'க்கு மங்கள வாழ்த்துக்கள்

      Delete
    21. மீனாக்ஷி மாதவனின் சகோதரி என்றும் திருவரங்கன்னுக்கு ஸ்ரீதேவி எனப்படும் திருமகள் மனைவி என்று ம் என்னக்கு நன்றாகவே தெரியும் நான் குரிப்பிட் டதன் நோக்கம் ரெங்கநாதன் என்ற பெயரை மட்டுமே நன்றி யாதவ் குமார் . அன்புடன்
      USHA EDN

      Delete
  7. WISH YOU HAPPY FRIENDSHIP DAY TO ALL FRIENDS

    ReplyDelete
  8. Replies
    1. Advance happy friendship day
      3.8.2015
      ஹா ஹா ஹா. .

      Delete
  9. "உன்னை(selection list)
    நினைக்கும் போதெல்லாம்
    கவிதை வருகிறது.......



    ஆனால்
    நீ மட்டும்
    வருவதில்லை....."

    ReplyDelete
    Replies
    1. நன்னா இருக்கே பலகாரம். ! நீங்களே செஞ்சீங்களா ?இல்ல கடைல சுட்டதா மாமி..!

      Delete
    2. அம்பி சுட்டது

      Delete
    3. ஆனால் நீர் வருகிறது கண்ணில் கண்ணீராக

      Delete
  10. histor62.16 what is the possibility

    ReplyDelete
  11. காலி பணியிடங்கள் 12000 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மக்களே........உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. சிறந்த commedy

      Delete
    2. இல்லைங்க.....கேள்விபட்டேன் உங்க கருத்து?

      Delete
    3. அவ்வாறு நிரப்பபட்டால் மிக்க மகிழ்ச்சி

      Delete
    4. உங்கள் கணிப்பு?

      Delete
    5. Dear Thiru,
      Neengal kelvipattathu unmaithan.
      Tomorrow no chance to publish selection list. Because additional vacancies will be added selection list.
      After that process is over selection list will be released. In my assumption may be on Wednesday or Thursday.

      Delete
    6. நன்றி சார்.....12000 to 12500 வரை கூடலாம் என்றார்கள்......உங்கள எனக்கு புடிக்கும் சார்......ஏனென்றால், நீங்கள் சொல்வது 99% உண்மையாகதான் இருக்கும்.........நான் எப்பவும் உங்க பதிவை நம்புவன் சார்......reply பன்னதுக்கு மீண்டுமொருமுறை நன்றி சார்.....

      Delete
    7. விஜகுமார் சார் உங்களின் கணிப்பில் எத்தனை பணியிடங்கள் அதிக்கரிக்க வைப்பு உள்ளது என்று கூ றமுடியுமா???

      Delete
    8. Dear Thiru,
      THANKS A LOT FOR YOUR BELIEVES.
      I maintain surely.

      Delete
    9. if it happens that will create more happiness to our friends..especially tamil,maths & science.

      Delete
    10. நண்பர்களே.........

      தமிழ் & அறீவியல் மட்டும் increase ஆகிறது....

      it is conformed news

      Delete
    11. நம்பலாமா ???

      Delete
    12. நம்பிக்கை தான் வாழ்க்கை எனவே நாமும் நம்புவோம் இனிதே நடக்கும்

      Delete
  12. ஒரு வேளை அமைச்சர் சொன்ன 13777 நிரப்பபடுமோ?

    ReplyDelete
    Replies
    1. சார் இந்த அமச்சருங்கல்லாம் சொல்றாங்கல்ல , போன வருசம் இவ்ளோ நிரப்பனேன், இந்த வருசம் இவ்ளோ நிரப்பப்போறன்ட்டு...அது நம்ம vaccantஅ பத்தி இல்ல சார். . அவுக account ய பத்தி. .இன்னும் பச்சபுள்ளயாவே இருக்கீங்க. .

      Delete
  13. ஆங்கிலம் mbc 65.20 வாய்ப்பு இருக்குமா? mbc ஆங்கிலம் உள்ளவர்கள் தெளிவு படுத்தவும்........

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு உண்டு சார் நிச்சயமாக ..

      Delete
    2. நன்றி சார்..........நீங்க ஆங்கிலமா சார்?

      Delete
    3. ஆமாங்க .. ஆமா... ஆங்கிலமே.

      Delete
  14. mbc ஆங்கிலம் தொடர்பு கொள்ளவும்..........9994911807

    ReplyDelete
    Replies
    1. My wtg 61.51 MBC female. Any chance for me. Pls reply sir. E

      Delete
  15. நீங்களூம் வெல்லலாம் ஒரு கோடி.......

    1.எந்த நாளீல் FINAL லிஸ்ட் வர வாய்ப்பு மிக அதிகம்?
    A) MONDAY
    B) WEDNESDAY
    C) FRIDAY
    D) இவற்றீல் எதுவும் இல்லை.

    ans பண்ணூங்க‌

    வெற்றீ பெரும் அனைவருக்கும் பரிசு நிச்சயம்

    ReplyDelete
    Replies
    1. sir wat abt tues and thursday...so i choose ans.D

      Delete
    2. ONE DAY

      O.k நமக்கும் grain வேல செய்ய ஆரம்பிக்குது..

      Delete
    3. Ambi sir... 50-50 r Phone of friend help line use panikalama.....:-P

      Delete
    4. Ans=E option
      விரைவில்...........................?

      Delete
  16. posting nichayam 20 aairathirku meal ethirpakkalam...nalai list varathu...vanthalum..2nd list varum innoru time

    ReplyDelete
  17. AMBI Sir, Neengal Pathirikkai Aasiriyar aavatharkum poruthamanavar..,
    Arumai.. Arumai..

    ReplyDelete
  18. Innum ungakita neraiya ethirpakuren

    ReplyDelete
  19. My wgt is 67.31 maths, bc, female. Enakku chance irukkuma plz tell me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி