நவம்பர் 8ல், குரூப் 2 முதன்மை தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2014

நவம்பர் 8ல், குரூப் 2 முதன்மை தேர்வு

குரூப் 2 முதன்மை தேர்வு, நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யான, அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு விவரம்: துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட, 19 பதவிகளில், 1,047 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதில், 4.98 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த, 8ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு (மெயின்), வரும், நவம்பர், 8ம் தேதி நடக்கும். இந்த தேர்வுக்கு, 11,497 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி