சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2014

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு


மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டு தோறும் கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில், சிறந்த பள்ளியை தேர்வு செய்வது குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது:

மாவட்ட வாரியாக, தொடக்கக்கல்வி அலுவலர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கொண்ட குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும். குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத்திறன், கணிதத்தில் அடிப்படைத் திறன், செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை, தேசியவிழாக்களில் மாணவர்களின் ஈடுபாடு, பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து, மதிப்பெண் வழங்க வேண்டும். மாவட்ட அளவில், மூன்ற சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வரும்,10ம் ?ததிக்குள் விவரத்தை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

4 comments:

  1. Paper1 நண்பர்களுக்கு. .
    Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
    95433 91234
    09663091690
    9597239898
    Accommodation available

    ReplyDelete
  2. Best school in Madurai. Velammal Memorial Matriculation Higher Secondary School. Thiruppalai, Madurai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி