இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 பிரதானத் தேர்வு வரும் 8-ஆம் தேதி முற்பகல், பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளங்களானwww.tnpscexams.net.ய்ங்ற் மற்றும் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதன்மை எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். காலையில் பொது அறிவு கொள்குறிவகைத் தேர்வு கணினி வழித் தேர்வாகவும், மாலையில் விரிவான விடை எழுதும் தேர்வாகவும் இருக்கும்.
முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இதுவரை தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள், தேர்வுக் கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3 என்ற பெயரில் பெறப்பட்ட வங்கி வரைவோலையை வரும் 8-ஆம் தேதி தேர்வுக் கூடத்தில் அளிக்க வேண்டும் என்று சோபனா தெரிவித்துள்ளார்.
Thanks
ReplyDelete