தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சரவணகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த சட்டத்தினால், பெரும்பான்மையானவர்களான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அருந்ததியர் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
விழிப்புணர்வு இல்லை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பி கடந்த அக்டோபர் 27-ந் தேதி உத்தரவிட்டார்கள்.இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வலசை ரவிசந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-அருந்ததியர் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளேன். தாழ்த்தப்பட்ட பிரிவில்,அருந்ததியர் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், எங்கள் மக்களிடம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு விவரங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், இந்த சலுகைகள் எல்லாம் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சென்று விடுகிறது.
கொத்தடிமை
இதனால், எங்கள் மக்கள் துப்புரவு தொழிலாளியாகவும், கொத்தடிமை தொழிலாளியாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளியாகவும் உள்ளனர். இதனால், அரசு பணி நியமனத்திலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் 3சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ம் ஆண்டு தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திருத்தத்தை இந்த ஐகோர்ட்டு ரத்து செய்தாலோ, தடை விதித்தாலோ அது எங்கள் சமுதாய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, என்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
hai friends good morning
ReplyDeleteBT minority counsling 13.11.14 so
kadaisila enji erupathu nam than
gendral govt sc/st than kalvi tharathil mikavum
pin thanki erukirathu endru puthiya thitdankala
kondu varuthu
but tn govt sc/ st padikka vaikka entha muyarchiyum pannala
last time madurai court stay kudukkayila
students kalvitharam pathikka padum nu seekaaram stay nekinarkal
but adw la 2007 lenthu posting podala so 669 vacant
so neraiya school la teacher ella
appo adw school la padikkaravankalm students ellaya
evanakale nammala padikka vidamattanka
apparam eligibility exam vaipanka 5 th to 10 th mark lenthu papanka
namma teacher ellama kasta pattu padichu mark eduthalum
atha eduthukama court la case eruku
case mudinchthm podurenu solvanka
enna kodumai ethu
பகுதி நேர பட்டதாரி ஆசிரியர் வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!
ReplyDelete