உலக 'மெகா' தொலைநோக்கி: இந்தியா ரூ.1,300 கோடி வழங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

உலக 'மெகா' தொலைநோக்கி: இந்தியா ரூ.1,300 கோடி வழங்குகிறது

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

டில்லியில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மற்றும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் தூதரக பிரதிநிதிகள் முன்னிலையில், இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின் கீழ், இந்தியா, 1,300 கோடி முதலீடு செய்ய உள்ளது. அதில், சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான மொத்த செலவில், 30 சதவீதமும், உயர்தரமான சென்சார் கருவிகள், முனைப்பு சாதனங்கள் போன்றவற்றுக்கு, 70 சதவீதமும் ஒதுக்கப்படும். ஹவாய் தீவில், 4,050 மீட்டர் உயரமுள்ள மானா கி சிகரத்தில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட உள்ளது. இதன் முகப்பு லென்ஸ், 30 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும். இந்த தொலைநோக்கியில், 500 கி.மீ., தூரத்தில் உள்ள, சிறிய நாணயம் போன்ற பொருளைக் கூட துல்லியமாக பார்க்க முடியும். மேலும், வானியல் விஞ்ஞானிகள், 1,300 கோடி ஒளி ஆண்டுகளின் தூரத்தையும், 20 - 40 கோடி ஆண்டுகளில் உருவான பழமையான நட்சத்திரக் கூட்டங்களையும் ஆய்வு செய்யலாம். தற்போது, ஸ்பெயினில், லா பால்மாவில் தான், உலகின் மிகப் பெரிய ஜி.டி.சி., தொலைநோக்கி உள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி