பெங்களூரைச் சேர்ந்த, இரண்டரை வயது சிறுவன், மூளை பாதிப்பு காரணமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல், மூளைச்சாவு நிலையை அடைந்தான். அவனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக, பெற்றோர் அறிவித்தனர். இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில், யாரும் கோராத நிலையில், சென்னை அடையாறு மலர் மருத்துவமனை, இதயத்தை கோரியது. இதையடுத்து, பெங்களூரு மருத்துவமனையில் அகற்றப்பட்ட இதயம், அங்கிருந்து, ஆறு பேர் மட்டுமே பயணம் செய்யும் சிறப்பு விமானத்தில், 1:10 மணி நேரம் பறந்து, நேற்று மதியம் 2:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சிக்கல் இல்லாத வகையில், ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து, பிரத்யேக ஆம்புலன்ஸ் உதவியுடன், 13 நிமிடங்களில், இதயம், அடையாறு மருத்துவமனையை சென்றடைந்தது. அங்கு, இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, ஒன்பது மாதங்களாக காத்திருந்த, ரஷ்யாவைச் சேர்ந்த, இரண்டு வயது குழந்தைக்கு, இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 'இதுபோன்று, சிறு வயது குழந்தையின் இதயத்தை தானம் பெற்று, சிறு வயது குழந்தைக்கு பொருத்துவது, இந்தியாவில் இதுவே முதல் முறை' என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளைச்சாவுக்கு பிந்தைய உடல் உறுப்புகள் தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களும், உடல் உறுப்பு தானத்திற்கான பிரத்யேக மையங்கள் துவங்கப்பட்ட, ஒருங்கிணைப்பு உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்தும், உடல் உறுப்பு தானம் பெற முடிகிறது.
பெங்களூரைச் சேர்ந்த, இரண்டரை வயது சிறுவன், மூளை பாதிப்பு காரணமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தான். ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும், காப்பாற்ற முடியாமல், மூளைச்சாவு நிலையை அடைந்தான். அவனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக, பெற்றோர் அறிவித்தனர். இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தகவல் தரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில், யாரும் கோராத நிலையில், சென்னை அடையாறு மலர் மருத்துவமனை, இதயத்தை கோரியது. இதையடுத்து, பெங்களூரு மருத்துவமனையில் அகற்றப்பட்ட இதயம், அங்கிருந்து, ஆறு பேர் மட்டுமே பயணம் செய்யும் சிறப்பு விமானத்தில், 1:10 மணி நேரம் பறந்து, நேற்று மதியம் 2:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்து சிக்கல் இல்லாத வகையில், ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து, பிரத்யேக ஆம்புலன்ஸ் உதவியுடன், 13 நிமிடங்களில், இதயம், அடையாறு மருத்துவமனையை சென்றடைந்தது. அங்கு, இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, ஒன்பது மாதங்களாக காத்திருந்த, ரஷ்யாவைச் சேர்ந்த, இரண்டு வயது குழந்தைக்கு, இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. 'இதுபோன்று, சிறு வயது குழந்தையின் இதயத்தை தானம் பெற்று, சிறு வயது குழந்தைக்கு பொருத்துவது, இந்தியாவில் இதுவே முதல் முறை' என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளைச்சாவுக்கு பிந்தைய உடல் உறுப்புகள் தானம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களும், உடல் உறுப்பு தானத்திற்கான பிரத்யேக மையங்கள் துவங்கப்பட்ட, ஒருங்கிணைப்பு உள்ளதால், பிற மாநிலங்களில் இருந்தும், உடல் உறுப்பு தானம் பெற முடிகிறது.
Amazing !!
ReplyDeleteவாழும் மனிதம்
ReplyDelete