சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைந்து வழங்க அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைந்து வழங்க அரசு உத்தரவு


பள்ளிகள் மூலம் ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள், அரசின் இலவச திட்டங்களை பெறவும், பிற பயன்பாடுகளுக்காகவும், ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்று பெற, தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.இதை பெறுவதில், கால தாமதம், லஞ்சம் என பல பிரச்னைகள் எழுந்ததால், பள்ளிகள் மூலமே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதுகுறித்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலைமையாசிரியர் மூலம், தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு, கால தாமதம் ஆவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்னையை, நேரடியாக, மாவட்ட கலெக்டர்களிடம் கொண்டு சென்று, சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி