புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2014

புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...


குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, அலுவலர்களின் செல்லிடை பேசி மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணைய தளத்தில் (www.consumer.tn.gov.in ) அளிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டைத்தாரர்களின் குறைபாடுகளைக் களைவதற்கு, “குறைதீர் முகாம்கள் “குறைதீர் முகாம்கள்” சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் 2ம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் குடும்பஅட்டை கோரும் மனுக்கள், அட்டைகளின் நகல் கோருதல், குடும்ப அட்டைகளில் உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், எரிவாயு இணைப்புகள் மற்றும் இவை தொடர்பான திருத்தங்கள் குறித்த மனுக்கள் பிற்பகல் வரை பெறப்பட்டு, உரிய பரிசீலனைக்குப் பிறகு அன்று மாலைக்குள் அவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது.

இக்குறைதீர் முகாம்களில் மாவட்ட, வட்டவழங்கல் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஜூன் 2011 முதல் 13.12.2014 வரையில் இம்முகாம்களில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 70 மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே இவ்வகை குறைதீர் முகாம்களை நடத்தும் ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 01.06.2011 முதல் 30.11.2014 வரை 11 இலட்சத்து 14 ஆயிரத்து 761 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், 3 இலட்சத்து 38 ஆயிரத்து984 போலிக் குடும்ப அட்டைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி