தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு மாநிலம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஜன., 21, 22, 23, 24 தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள், அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் கற்கும் திறன் குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி