வனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2015

வனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு.

வனவர், கள உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டித் தேர்வினை 35 ஆயிரம் பேர் எழுதினர்.

இது குறித்து தமிழ்நாடு வனச் சீருடை பணியாளர்கள் தேர்வு குழு அதிகாரிகள் கூறியது:

வனவர், கள உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையில், 68 இடங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 10,700 பேர் எழுதினர். ஆறு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 35 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

காலை பொது அறிவும், பிற்பகல் பொது அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி