20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2015

20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்


ஊத்தங்கரை அரசுப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன் தனது சம்பளத்தில் 20 சதத்தை மாணவர்களின் நலனுக்கு மாதந்தோறும் வழங்கி வருகிறார்.ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கு.கணேசன். இவர் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் ரூ.73 ஆயிரத்தையும், 2014-15-ஆம் கல்வியாண்டில் ரூ.79 ஆயிரத்தையும் தனது சம்பளத்தில் இருந்து வழங்கியுள்ளார்.
இவர் தற்போது, 2015-16-ஆம் கல்வியாண்டுக்காக தனது சம்பளத்தில் இருந்து 20 சதத்தை மாணவர்களின் நலனுக்காக வழங்க சம்மதித்து, அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பொன்னுசாமியிடம் வழங்கினார்.இவரது மனைவி பிரபாவதி.

இந்தத் தம்பதியின் மகன்கள் ஹரிஹரன், ரிஷ்வந்த். இவர், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, பெற்றோரை இழந்த, மாற்றுத் திறனாளி மாணவர்கள் என, 4,000 பேருக்கு இலவச சீருடையை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் 920 மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கியுள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்ற 360 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார். அரசுப் பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகளை வழங்கியுள்ளார்.ஆசிரியர் கணேசனை, ஸ்ரீ வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன், அதியமான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனி.திருமால்முருகன்உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

11 comments:

  1. i am really appreciate your service.what a man you are!

    ReplyDelete
  2. arasu vazhangum maniyam pana uthavigalai martum manavaridam kollaiyadithu sappitiu yepam vitu gondu vazhginta clerk, headmaster ulla intha kalathil ippadiyum oruvara?congrats

    ReplyDelete
  3. VERY GOOD PLAN FOR TAX REDUCTION TOO, MAY FOLLOW ALL GOVT. TEACHERS.....

    ReplyDelete
  4. Ashokan venugopal intha idea ungaloda super puththiya kaatuthu.

    ReplyDelete
  5. Ashokan venugopal intha idea ungaloda super puththiya kaatuthu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி