20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தூக்கி எறிந்த தமிழர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2015

20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தூக்கி எறிந்த தமிழர்!


ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் கல்லூரியில் இருந்து பணியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக கூறி 20 தமிழர்களை கடந்த 7ம் திகதி சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இவர் திருமணம் ஆகி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.மேலும், ஆந்திராவில் தமிழர்கள் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி