பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2015

பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.இந்த தேர்வில் கணிதத்தேர்வில் ஒருகேள்வி குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்தக்கேள்வியில் கேட்பப்பட்டது மைனசா, பிளஸா என்று தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.

அதுபோல வேதியியல் தேர்வில் 10-வது கேள்வியும் சரியாக கேட்கப்படவில்லை. 22-வது கேள்வியில் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் சரி இல்லை. மேலும் பொருளாதார தேர்வில் 78-வது கேள்வி 20 மதிப்பெண்ணுக்கு உரியது.அந்த கேள்வி பற்றியும் பிரச்சினை கிளப்பப்பட்டது. எனவே பிளஸ்-2 கணிததேர்வு, வேதியியல் தேர்வு, பொருளாதார தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளில் எந்த தேர்வுக்கு? எத்தனை கருணை மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளீர்கள்? என்று கேட்டதற்கு அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் பதில் அளிக்கையில் “ஒவ்வொரு பாடத்திற்குரிய தேர்வுக்கும் தனித்தனியாக சரியான விடை அளிப்பதற்கான கமிட்டி போடப்பட்டுள்ளது. அந்த கமிட்டி இன்னும் அறிக்கை தரவில்லை. அதனால் கருணை மதிப்பெண் போடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி