மணியார்டருக்கு மூடு விழா மத்திய அரசு முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2015

மணியார்டருக்கு மூடு விழா மத்திய அரசு முடிவு?


நாடு முழுவதும் தற்போது வரை பயன்பாட்டில் உள்ள மணியார்டர் முறைக்கு மூடு விழா நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால சேவை முடிவு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தபால் துறை துணை தலைவர் ஷிகா மாத்தூர் குமார் கூறியதாவது:

1880-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இச் சேவை நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும் அதி்கமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்தில் செல்போன் , இண்டர் நெட் முறையிலான எஸ்.எம்.எஸ்., இ-மெயில் ஆகியவை மூலம் செய்திகள் விரைவாக அனுப்ப துவங்கியதை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது.தொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் முதல் உடனடியாக பணத்தை பெறும் வகையி்ல் எலக்ட்ரானிக் மணியார்டர் முறை புழக்கத்தில் உள்ளது.மணியார்டருக்கு மூடு விழா நடத்துவதன் மூலம் 135 ஆண்டு கால பழமையான படிவத்தை பூர்த்தி செய்து பணம் அனுப்பும் முறை முடிவுக்கு வர உள்ளது என கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி