தலைமையாசிரியர் பதவி உயர்வு, மருத்துவ விடுப்பை அனுமதிக்காமல் தனக்கு பள்ளிநிர்வாகம் நெருக்கடி அளித்து வருவதாக திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும்கூட்டத்தில் ஆட்சியரிடம் பெண் ஆசிரியை புகார் மனு அளித்தார்.
பாளையங்கோட்டையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருபவர் கே. சுந்தரராஜன் மனைவி பார்வதி, அளித்த புகார் மனு: இந்துஅறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் 1993 இல் இருந்து ஆசிரியராக பணி செய்து வருகிறேன். மூத்த ஆசிரியையான எனக்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் பதவி வழங்காமல், என்னை விட பணியில் இளைய ஆசிரியை ஒருவருக்கு பதவி உயர்வை விட்டுக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் தரப்பில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.கல்வித்துறை மூலம் எனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் வகையில் பள்ளியில் பணி செய்து வரும் பிற ஆசிரியர்களும் நிர்வாகத்துடன் சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் சென்ற 26 நாட்களை அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகம் கடந்த 7 மாதமாக இழுத்தடித்து வருகிறது.
பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, மருத்துவ விடுப்பினை அனுமதிக்காமல் என்னை விருப்ப ஓய்வில் செல்லுமாறு நெருக்கடி அளித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apr 6, 2015
Home
kalviseithi
தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்
தலைமையாசிரியர் பதவி அளிக்க மறுப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆசிரியை புகார்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி