ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகிலஇந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மாதிரி இலவச முதன்மை தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இலவசம்
இதுகுறித்து, மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை பி.எஸ்.குமாரசாமிராஜா சாலை, காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட இனத்தை சேர்ந்த, 325 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் முதன்மை தேர்வுகளுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, நுாலக, கணினி பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு, இலவச மாதிரி ஆளுமை தேர்வு பயிற்சியை நடத்த உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க, இன்று துவங்கி, ஏப்., 18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், விண்ணப்பித்த முதன்மை தேர்வு விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
எப்போது?
பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, வரும் 23, 24, 25ம் தேதிகளில், மாதிரிஆளுமை தேர்வு பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சியை, அனுபவமிக்க இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, கல்லுாரி பேராசிரியர்கள் அளிப்பர். ஆளுமை தேர்வுக்காக, புதுடில்லி செல்லும் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். ஆளுமை தேர்வுக்காக டில்லி செல்லும் மாணவர்களுக்கு, பயணப்படியாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, www.civilservicecoaching.com என்ற இணையதளத்திலோ, 044 -- 2462 1475 என்ற தொலைபேசி எண்ணிலோ தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி