"தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2015

"தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாக வேண்டும்'

தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சான்றோர் தமிழ்க் காப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மத்திய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி, தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழி என்று கொண்டுவர சட்டம் இயற்றப்பட வேண்டும். அத்துடன், இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. சரியான முயற்சி. சான்றோர் தமிழ்க் காப்பு அமைப்பிற்குப் பாராட்டுக்கள்!
    தொடக்கக் கல்வி மட்டுமல்லாது, பட்ட மேற்படிப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும். மற்ற மொழியை மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி