துறைவாரியான மானியக் கோரிக் கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை 15-ம் தேதிக்குமேல் கூட வாய்ப்புள்ள தாக கூறப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சட்டப் பேரவையின் முதல் கூட்டம், கடந்த பிப்ரவரி 17-ம்தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சில தினங்கள் விவாதம் நடத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மார்ச் 25-ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ஏப்ரல் 1-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே பேரவை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இதை எதிர்பார்த்து அதிமுகவினர் காத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து 15-ம் தேதிக்கு பிறகு சட்டப்பேரவையைக் கூட்டி மானியக்கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய் திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன. இதற்கான அறிவிப்பு 11-ம் தேதிக்கு மேல் வெளியிடப்படும் என்றும், பேரவைக் கூட்டத்துக்கான ஆயத்தப்பணிகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும் கூறப் படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி