பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2015

பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:


வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது.
யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி