நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2015

நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

வீட்டுக் கடனை உயர்த்தி வழங் குதல், கருணை அடிப்படையில் வேலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (24-ம் தேதி) நடத்த இருந்த ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:வங்கி ஊழியர்களுக்கு அளிக்கப் படும் வீட்டுக் கடன் வசதியை உயர்த்தி வழங்க வேண்டும். இறந்த வங்கி ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவழங்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள் சங்கத்துக்கு எதிராக எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் மேற்கொண்டு வரும் விரோதப்போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் மாநில வங்கி ஊழியர்கள் சங்கம் இணைந்து ஜூன் 24-ம் தேதி (நாளை) ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், அரசு அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு சென்று இப்பிரச்சினையை தீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜூன் 24-ம் தேதி நடத்த இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி