இதுகுறித்து லண்டன் பல்கலைக் கழகத்தின் புள்ளியில் மற்றும் நீதிநெறித் துறை பேராசிரியரும், ரெக்ஸ்யூ அமைப்பின் நிர்வாகியுமான அபிஷேக் கிலிபோடு கோவையில் ஆய்வு ஒன்றை நடத்தினார் ஆய்வின் முடிவு குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:- கோவையில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 400 மாணவர்களிடம் ஆபாச படம் பார்ப்பது குறித்த ஆய்வை கடந்த 4 வார காலமாக நடத்தினோம். இந்த ஆய்வில் 18 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 71 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு சுமார் 4 மணி நேரம் ஆபாச படங்களை தங்கள் செல்போன்மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் பார்ப்பதாக தெரிவித்தனர். சுமார் 31 சதவீத மாணவர்கள் வாரத்துக்கு 17 முறை பலாத்கார காட்சிகளை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.
வருடத்துக்கு புதிதாக 6,200 மாணவர்கள் பலாத்கார ஆபாச படங்களை இணைய தளம் வாயிலாக பார்க்கிறார்கள். இதன் மூலம் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட மாணவிகளை கடத்தும் சம்பவத்தில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். மேலும் சில மாணவர்கள் விபசார அழகிகளை நாடும் அவலமும் உண்டாகி உள்ளது. ஆண்டுக்கு 2500 மாணவிகள் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. இந்த சம்பவத்தை தடுக்க இணையதளத்தில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nallathu seiya tn govt munnadi varathe
ReplyDeleteNallathu seiya tn govt munnadi varathe
ReplyDelete