பயிற்சி மருத்துவர்களுக்கு, 24 மணி நேர பணிமுறை தராமல், ஷிப்டு முறையை அமல்படுத்த வேண்டும் என, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர் என, 7,000 பேர் உள்ளனர். இவர்களின் வேலை நேரம் தொடர்பாக, முறையான விதிமுறைகள் இல்லாமல் இருந்தது.இதனால், இவர்கள், 24 மணி நேரம், 48 மணி நேரம் வேலை செய்யும் நிலை இருந்தது.
உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படுவதால், ஷிப்டு முறை கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.அதனால், பயிற்சி மருத்துவர் பணி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான வேலை நேரத்தை, ஷிப்டு முறைக்கு மாற்றி, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அரசு மருத்துவக் கல்லுாரிகள், சார்புடைய மருத்துவமனைகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
எங்களின் நீண்ட கால கோரிக்கையை, அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 24 மணி நேரம், 48 மணி நேர வேலை இல்லை என்பதால், மனச்சோர்வு, உடல் சோர்வு இன்றி நிம்மதியாக, இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும்.இதை, உத்தரவோடு நிறுத்தாமல், விரைவில் செயல்படுத்த வேண்டும். டாக்டர் பிரசாந்த்துணைத் தலைவர், தமிழ்நாடு பயிற்சி டாக்டர் சங்கம்.
தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இதில், பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர் என, 7,000 பேர் உள்ளனர். இவர்களின் வேலை நேரம் தொடர்பாக, முறையான விதிமுறைகள் இல்லாமல் இருந்தது.இதனால், இவர்கள், 24 மணி நேரம், 48 மணி நேரம் வேலை செய்யும் நிலை இருந்தது.
உடல் சோர்வு, மன சோர்வு ஏற்படுவதால், ஷிப்டு முறை கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.அதனால், பயிற்சி மருத்துவர் பணி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பயிற்சி மருத்துவர், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான வேலை நேரத்தை, ஷிப்டு முறைக்கு மாற்றி, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, அரசு மருத்துவக் கல்லுாரிகள், சார்புடைய மருத்துவமனைகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
எங்களின் நீண்ட கால கோரிக்கையை, அரசு ஏற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 24 மணி நேரம், 48 மணி நேர வேலை இல்லை என்பதால், மனச்சோர்வு, உடல் சோர்வு இன்றி நிம்மதியாக, இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும்.இதை, உத்தரவோடு நிறுத்தாமல், விரைவில் செயல்படுத்த வேண்டும். டாக்டர் பிரசாந்த்துணைத் தலைவர், தமிழ்நாடு பயிற்சி டாக்டர் சங்கம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி