“வாட்ஸ்ஆப் ” பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள்முயற்சி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2015

“வாட்ஸ்ஆப் ” பயன்படுத்த கூடுதல் கட்டணம் வசூலிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள்முயற்சி ?

இணையதள சமத்துவம் குறித்து தொலைத்தொடர்பு அமைச்சக நிபுணர் குழு, மத்திய அரசுக்கு அளித்துள்ளஅறிக்கையில் பரிந்துரைத்துள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.நுகர்வோருக்கு இணையதள சேவை அளிப்பதில் கட்டணத்தின் அடிப்படையிலோ அல்லது வேகத்தின் அடிப்படையிலோ பாகுபாடு காட்டக் கூடாது என்று அந்தக் குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.


data மற்றும் பல்வேறு அப்ளிகேஷன்கள் வழங்குவதிலும் பாகுபாடு காட்டக் கூடாதுஎன்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏர்டெல் போன்ற இணையதள சேவை நிறுவனங்கள், நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசித்து இந்த பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழுவழங்கியுள்ளது.

வாட்சப், ஸ்கைப் போன்ற வசதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளையும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவன அழைப்புகள் போல அரசு நெறிப்படுத்த வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் Internet dot org திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த அறிக்கை ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் ஜீரோ திட்டத்தை உரியஒப்புதலுடன் அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.இணையதள சேவை அளிக்கும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாட்சப் போன்ற வசதிகளை தருவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது​

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி