வேலூரில் செப்டம்பர் 3-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2015

வேலூரில் செப்டம்பர் 3-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவின் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி வேலூரில் செப்டம்பர் 3-இல் நடைபெறுகிறது.


இந்தப் போட்டி காவலர் கல்யாண மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை), முதுநிலைப் பிரிவு (6-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்பு வரை) போட்டிகள் இரு பிரிவாக நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்போர் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்றிதழ்களுடன் தங்கள் பெயர்களை 1-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் நேதாஜி விளையாட்டரங்கில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி அடையாள அட்டைகள் ஏற்கப்பட மாட்டாது. ஒரு பள்ளியில் இருந்து ஒற்றையர் போட்டியில் 3 பேருக்கு மிகாமலும், இரட்டையர் போட்டியில் 2 ஜோடிகளுக்கு மிகாமலும் பங்கேற்கலாம். மாணவர்கள் தத்தம் பள்ளிச் சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும். மதிய உணவு, தினப்படி, பயணப்படி ஆகியன வழங்கப்பட மாட்டாது. வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.


இந்தத் தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி