தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2015

தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்; 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வுஊழியர் பற்றாக்குறையால் மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


மாதம்தோறும், 500 - 750 ஊழியர் ஓய்வு பெறுவதால், 20 பேர் செய்யும் வேலையை, ஒரு ஊழியர் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிதாக உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் என, 7,500 ஊழியர்களை நியமிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.


இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊழியர் பற்றாக்குறையைசமாளிக்க, கடந்த லோக்சபா தேர்தல் முடிந்த பின் புதிதாக, 5,000 ஊழியர் நியமிக்கப்படஇருந்தனர். ஆனால், அதன்பின், தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலால் நியமிக்கப்படவில்லை.முதல்வர்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விரை வில் துவங்க உள்ளது.இதில், 110வது விதியின் கீழ், மின் வாரியத்தில், 7,500 ஊழியர் நியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி