ஸ்மார்ட் சிட்டி திட்ட தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2015

ஸ்மார்ட் சிட்டி திட்ட தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு.

ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி, சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான 98 நகரங்கள் பட்டியல் வெளியீடு


தமிழகத்தில்

��மதுரை
��கோவை
��சென்னை,
�� வேலூர்,
�� சேலம்,
��திருப்பூர்
��திருச்சி�� திண்டுக்கல், ��தஞ்சை,
��தூத்துக்குடி,
��திருநெல்வேலி,
��ஈரோடு

ஆகிய நகரங்கள் தேர்வுதேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புகள், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த தீர்வுகள் வழங்குவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படும் நன்மைகள் என்னஸ்மார்ட் நகரங்கள் உருவாவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம்.
��பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதமாகஇந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது.
��இதன்மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் கிடைக்கும். இதற்கான நகரங்கள் போட்டி மூலம் தேர்ந்து எடுக்கப்படும்.
��இருக்கும் சொத்துக்கள், வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு தூய்மையான, வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
��இதில் பங்கேற்கும் குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.
��ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மையான தண்ணீர், கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, ஏழைகளுக்கு வீட்டு வசதி, மின் வசதி, மின்னணு ஆளுமை உள்ளிட்டவற்றுக்குமுன்னுரிமை வழங்கப்படும்
��இதே போன்று, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
��அடிப்படை சேவைகள், குழந்தைகளின் தேவைகள், மழைநீர் வடிகால் அமைப்பு,பசுமையை பாதுகாக்க பூங்காக்கள் ஆகியவை நிறைவேற்றப்படும்.
��நகர்ப்புற சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், மின் ஆளுமை தொழில்முறை நகராட்சி பணிநிலை, நகராட்சி வரி மதிப்பீடு நகர்ப்பகுதிகளில் சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
��அடல் மிஷன் எனப்படும் அம்ருத் திட்டம் மூலம் 500 நகரங்களில் வளர்ச்சி திட்டங்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
��சில முக்கிய நதிகள், மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மலை பகுதிகள், சுற்றுலா மையங்களை ஒட்டி ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
��10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவிகிதமும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும்.
��இதற்கான மத்திய அரசின் நிதியுதவி மூன்று தவணைகளாக அளிக்கப்படும்.
��நூறு ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் – நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும்.
��ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய நோக்கங்களும்நிறைவேறும் என்பது மத்திய அரசின் உறுதியான நம்பிக்கை ஆகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி