மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையைகுறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2015

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையைகுறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அனைத்து புத்தகங்களையும் பள்ளிக்கு கொண்டுவருவதைதவிர்க்கும் வகையில் தெளிவான கால அட்டவணையை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வகுத்தளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கொண்டுவராத பாட புத்தகங்கள் தேவைப்படும் போது அவற்றை உடனடியாக பெற உதவும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும்.


டெல்லியில் நாளை நடைபெற உள்ள கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் இந்த விதிமுறைகள் விவாதத்திற்கு வைக்கப்பட உள்ளன. அப்போது முன்வைக்கப்படும் கருத்துகளையும் சேர்த்து புதிய விதிகள் வெளியிடப்படும் என மத்திய மனித வள மேம்மபாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி