தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2015

தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ., 8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.


இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதன்படி மாநில அளவிலான முதற்கட்ட தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவ., 8ம் தேதி நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வியின் தேர்வுத் துறை தனியே அறிவிக்கும். இதில் வெற்றி பெறும் அனைத்து மாநில மாணவர்களுக்கும் தேசிய அளவில் இறுதிகட்ட தேர்வு அடுத்த ஆண்டு மே 8ம் தேதி நடக்கும்.இந்த தேர்வில் மனநிலை தாள், மொழித்தாள், கல்வித்திறன் அறிதல் என மூன்று தாள்கள் எழுத வேண்டும். தலித் மாணவர்களுக்கு, 15 சதவீதம், பழங்குடியினருக்கு, 7.5 சதவீதம் மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி