மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2015

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


கடந்த, 2013-14 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக்குகளில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. கடந்த, 2011-12ல், 9 லட்சம் பேர்; 2012-13ல், 7 லட்சம் பேர்; 2013-14ல், 5 லட்சம் பேருக்கு,இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த நிதியாண்டு, 6 லட்சம் பேருக்கும், நடப்பாண்டு, 6 லட்சம் பேருக்கும், இலவச லேப்டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.


இந்நிதியில், தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' மூலம், லேப்டாப் கொள்முதல் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அவர் அதிகாரிகளிடம், ''இலவச லேப்டாப் வழங்கும் திட்ட இலக்குபடி, டிசம்பருக்குள், அனைவருக்கும் லேப்டாப் வழங்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி