காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2015

காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கருவூல துறை இணை இயக்குனர் காத்தவராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு கருவூலக் கணக்கு துறையின், காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, இன சுழற்சிமற்றும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பொது ஆகியபிரிவினருக்கு, 32 வயதும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்ட வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள், இணை இயக்குனர், மாவட்ட கருவூலம், ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. ADMISSION OPEN
    M.Phil / P.Hd
    Part Time / Regular,
    Govt. University
    Contact :
    SRI ANNAMLAIYAR EDUCATIONAL TRUST,
    TIRUVANNAMALAI & GUDIYATTAM.
    CELL l: 9500838334 / 9566572757

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி