தமிழகத்தில் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அக்.15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல்பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இவர்கள் பள்ளி, உயர்கல்வி தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் செப்.25க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 9ம் வகுப்பு முதல் பி.எச்டி., மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் 'ஆன்லைன்' மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு அக்.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sep 12, 2015
Home
kalviseithi
சிறுபான்மை மாணவர் கல்விஉதவித் தொகைக்கு தேதி நீட்டிப்பு
சிறுபான்மை மாணவர் கல்விஉதவித் தொகைக்கு தேதி நீட்டிப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி