இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2015

இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய சேவை மையங்கள் மூலமாக,ஆதார் அட்டையில் மின்னஞ்சல்- செல்லிடப்பேசி எண்களை மாற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில், தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகம் என மொத்தம் 337 இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மையங்கள் மூலமாக, தமிழக அரசின் வருவாய்த் துறை, சமூகநலத் துறை சார்ந்த 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சேவை மையங்கள் வழியாக 4 லட்சத்து 36 ஆயிரத்து 352 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை அளிக்கப்பட்டுள்ளது.இந்த 337 மையங்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தச் சேவையைப் பெற விரும்புவோர், ரூ.10 செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி