அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2015

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம்

இன்ஜி., மாணவர்கள் சிலருக்கு, 'டெங்கு' காய்ச்சல் அறிகுறி உள்ளதை தொடர்ந்து, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, நிலவேம்பு கசாயம் அருந்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலை விடுதியில் தங்கி படிக்கும், இறுதி ஆண்டு மாணவர்கள், 30 பேருக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. பல்கலையின் மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில், சிலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறி தெரியவந்தது.அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, மாணவர்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதை அண்ணா பல்கலை கட்டாயமாக்கியுள்ளது. விடுதி வளாகத்திலுள்ள மாணவர் மற்றும் மாணவியருக்கான உணவகங்களில், நிலவேம்பு கசாயம், தினமும், மூன்று முறை வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி