பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2015

பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.


14-ந் தேதி பகல் 1 மணிக்கு கணிதம் படித்த மாணவர்களுக்கு நடக்கிறது.15-ந் தேதி காலை 9 மணிக்கு இயற்பியல் படித்தவர்களுக்கும், 10 மணிக்கு தாவரவியல் படித்தவர்களுக்கும், பகல் 1 மணிக்கு வேதியியல் படித்தவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு விலங்கியல் படித்தவர்களுக்கும், 16-ந் தேதி காலை 9 மணிக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் புவியியல் படித்தவர்களுக்கும், பகல் 1 மணிக்குவரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், மனை அறிவியல் படித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி