நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிமுதலாம்ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில்தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிமாணவி வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2015

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிமுதலாம்ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில்தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிமாணவி வெற்றி

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் இரண்டாவது சுற்றில் 7 மையங்களில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்கள்கலந்து கொண்டனர்.ஜூனியர் பிரிவில் மொத்தம் 21 மாணவர்கள் பங்கெடுத்தனர்.


மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி சிறப்பு பரிசாக ரூபாய் 5,000மும்,சான்றிதழும் வெற்றி பெற்றார்.இப்போட்டியானது சென்னையில் நடைபெற்றது.மாணவியின் தாயார் இதுவரை காரைக்குடியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை.எனவே நியூஸ் 7 தொலைகாட்சியின் செலவில் இவரது தாயார் ,ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் அரசு விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்ப்பவர். தந்தைக்கு நல்ல வேலை இல்லை.இந்த சூழ்நிலையில் ஆசிரியர் உதவியுடன் ( அரசு விடுமுறை அன்று) இம்மாணவி சென்னை சென்று அங்கு வந்திருந்த தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவியும் இது போன்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் கலந்து கொண்டது இது தான் முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதுமுதன் முதலாக நடைபெறும் போட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசு தொகை ரூபாய் 5,000 வெற்றி பெற்றது பாராட்ட வேண்டிய ஒன்று.இந்த அருமயான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நியூஸ் 7 தொலைகாட்சிக்கு நன்றி.மேடையில் தனது மகள் பரிசு வாங்குவதை பார்த்ததாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.பள்ளியில் காலை வழிப்பாட்டு கூட்டதில் சான்றிதழையும் ,பரிசு தொகையும் மாணவியை பாராட்டி கொடுத்த போது அவரதுதாயார் இது வரை சென்னை வரை செல்லாத என்னை விடுமுறை நாளன்று அழைத்து சென்று நல்லபடியாக அழைத்து வந்த ஆசிரியைக்கும்,மிகபெரிய வெளிச்சத்தின் நடுவே மிகபெரிய கூட்டத்தின் முன்பாக எனது மகள் பேசுவதையும்,பரிசு வாங்குவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த தருணத்தை எண்ணி இப்பள்ளிக்கும் , நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சிக்கும்நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

லெ .சொக்கலிங்கம் ,

தலைமை ஆசிரியர்,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி