தமிழகம் முழுவதும் கன மழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2015

தமிழகம் முழுவதும் கன மழை: 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கன மழை காரணமாக 9 மாவட்டங்களில் உள்ளபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களுடன் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததது.இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ. 13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.


பல்கலை. தேர்வு ஒத்திவைப்புசென்னை பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக் கழக வேந்தர் தாண்டவன் உத்தரவிட்டுள்ளார்.எனினும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி