அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி

அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.


இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குஇந்தப் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வட்டார அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 6,400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.


ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுஉள்ளிட்ட தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வு பெற்று வருகின்றனர். இதையடுத்துஅரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு "டான் எக்ùஸல்' திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்தப் பயிற்சியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளதால் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி