அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2015

அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.


அதனடிப்படையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாமை டிச.14-ந்தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்துகிறது.மாணவர்கள் தங்களிடம் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றதற்கான சான்றுகளான மாணவர் சேர்க்கை எண் அல்லது சேர்க்கை அடையாள அட்டை அல்லது தேர்வு பதிவு எண் அல்லது தேர்வு அனுமதி சீட்டு போன்ற ஏதேனும் ஒரு அடையாளத்துடன் விண்ணப்பித்து எவ்வித கட்டணமின்றி மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்புஃ கே.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி