கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2015

கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல்

சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க ளில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர் களுக்கு நகல் சான்றிதழ் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.


கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு முகாம் திங்கள்கிழமை யுடன் முடிவடைந்தது. 10-ம் வகுப்பு சான்றிதழ் கேட்டு 12,350 பேர், பிளஸ்-2 சான்று கோரி 7,444 பேர், மாற்றுச்சான்றிதழ் (டிசி) கேட்டு 5,395 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித் திருப்பதாக பள்ளிக்கல்வி இயக்கு நர் கண்ணப்பன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி