வங்க கடலின், தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு நிலை, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளதால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:
இரு நாட்களுக்கு முன், வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான, காற்று அழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை நிலவரப்படி, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளது.இதனால், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலுாரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு இல்லை.சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில், விட்டு விட்டு மழை பெய்யலாம். கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம் - 22; தஞ்சை மாவட்டம், மதுக்கூர் - 9;நெல்லை மாவட்டம், பாபநாசம் - 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Dec 10, 2015
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி