எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2015

எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்.. கலங்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா உருக்கம்

உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளஅறிக்கையில்,


தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் தமிழக அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது.வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும், வெள்ளப் பெருக்கும் தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம்.நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது.நிவாரணப் பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும், பாராட்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கெல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பணியில் பங்குபெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

39 comments:

  1. அப்படியென்றால் TET விஷயத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டு கண்ணீர் கடலில் மூழ்கி சின்னாபின்னாவாக ஆனோமே அப்பொழுது எங்கே சென்றீர்கள்..... எங்களின் உரிமைக் குரல் உங்கள் காதுகளுக்கு எட்டாமல் போனதன் காரணம்.... அனைவரும் அறிந்ததே.....
    எங்களுக்கு தான் ஓர வஞ்சனை செய்தீர்கள். இவர்களுக்காவது உடன் இருப்பேன் என தெரிவித்ததற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அப்படியென்றால் TET விஷயத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டு கண்ணீர் கடலில் மூழ்கி சின்னாபின்னாவாக ஆனோமே அப்பொழுது எங்கே சென்றீர்கள்..... எங்களின் உரிமைக் குரல் உங்கள் காதுகளுக்கு எட்டாமல் போனதன் காரணம்.... அனைவரும் அறிந்ததே.....
    எங்களுக்கு தான் ஓர வஞ்சனை செய்தீர்கள். இவர்களுக்காவது உடன் இருப்பேன் என தெரிவித்ததற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா நமக்கு நற்செய்தி விரைவில் எதிர்பாருங்கள்.. அதற்கான ஆலோசனை நடைபெற்றது.. விரைவில் TET தேர்விற்கு புதிய நெறிமுறைகள் பின்பற்ற இருக்கிறார் முதல்வர்

      Delete
    2. நற்செய்தியா ??
      அந்த செய்தியை நாடறியும் .
      எத்தனை காலி பணியிடங்கள் என யாருக்கும் சொல்லாமல் தேர்வு நடத்தப்படும் .

      முடிவு வரும் .
      அதில் பெரும்பான்மையாக எல்லோருடைய பெயரும் வரும் .
      பின்னர் தேர்தல் வரும் .
      எல்லோரும் நம்பிக்கையால் ஓட்டளிப்போம் .

      முடிவில் நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் ,
      மக்களாகிய நாங்கள் "மாக்கள் " ஆக்கப்படுவோம் உங்களால் .

      ஏற்றிவிட்ட ஏணிகளை எட்டி உதைப்பது வழக்கம் தானே உங்கள் தற்போதைய முதல்வருக்கு .

      Delete
    3. நற்செய்தி அறிவிப்பாளரே ,

      உங்களுக்காக "கெட்ட செய்தி ".

      கணக்கை "குழப்பிய சாமி" செய்த தவறுகளை மேற்கோள் காட்டி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .

      "பிப்ரவரி முதல்
      தினசரி விசாரணை ".

      இது எங்களுக்கு நல்ல செய்தி .

      Delete
  3. மக்கள் நலன் பற்றி எந்நேரமும் சிந்தனை செய்யும் ஒரே தமிழக அரசியல் தலைவி...

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா நிறைய பேர் சொன்னாங்க!?

      Delete
    2. ஆமா .
      இன்னும் எதிலெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டலாம் னு ஒரே சிந்தனை தான்

      Delete
  4. 2016 comedy article published by Jayalalitha... Please do laugh
    .....

    ReplyDelete
  5. சினிமா உலகில் கற்ற நடிப்பு ....
    மக்களுக்காக அருமையான நடிப்பு அறிக்கை ...

    ReplyDelete
  6. அருமையான கதை... இதற்கு திரைக்கதை ஒ.பி.எஸ்... ஆசிரியர்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்...

    ReplyDelete
  7. PLEASE KNOCK TRB.THERE IS NO INFORMATION FROM TRB ABOUT ALL POSTING. I THINK THAT TRB IS SLEEPING.

    ReplyDelete
  8. PLEASE KNOCK TRB.THERE IS NO INFORMATION FROM TRB ABOUT ALL POSTING. I THINK THAT TRB IS SLEEPING.

    ReplyDelete
  9. எந்த நேரத்திலும் உங்களுடனே இருப்பேன் -

    எங்கள் வாய் ல ஸ்டிக்கர் ஒட்டாதீங்க

    ReplyDelete
  10. Ellarum ondraga innainthu trb Kita poi ketkanum....

    ReplyDelete
  11. Namakku mattun ippadi dhoorogam seidhar...

    ReplyDelete
  12. Pathu per satham pota athu unmai akathu,irukira idathil irunthu yar venalum enna comment venalum adikalam, but the only leader will know what to do and can handle situation of all side, so we hope that will change to better for us

    ReplyDelete
    Replies
    1. தலைமையின் கையில் அனைத்து அதிகாரமும் குவிக்கபடுதல் & துதிபாடும் கூன் பாண்டிகளை கையில் வைத்து இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் இதெல்லாம் .

      Delete
  13. Weightage pota vaga family vilagathu

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. தேர்வு வைத்ததால் தானே உங்களுக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பே வந்தது . சீனியாரிட்டி என்றால் உங்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  16. 2006-07 ல் பி.எட்., பட்டையப் பயிற்சி பெற்றவர்கள் இன்னும் சீனியாரிட்டி இருந்தும் தேர்வு என்பதால் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் நிறைவு கூருங்கள்.

    ReplyDelete
  17. 2006-07 ல் பி.எட்., பட்டையப் பயிற்சி பெற்றவர்கள் இன்னும் சீனியாரிட்டி இருந்தும் தேர்வு என்பதால் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும் நிறைவு கூருங்கள்.

    ReplyDelete
  18. தேர்வு வைத்ததால் தானே உங்களுக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பே வந்தது . சீனியாரிட்டி என்றால் உங்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Yes you r right Suresh, ivanga ippadi than yathavathu sollikite irupanga, seniority ah iruntha 50 years la than govt job Ku poka mudiyum, so friends 2011 la irunthu ithu varaikum potta postings konjam thirumbi parunga vera entha govt um intha mathiri posting potathu illa, nandriyai marapathu nandru andru

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Amma avargal first intha weitage system cancel pannanum...

    ReplyDelete
  21. Election varathula appo thevaillama mark kammipanni vote vangana ippo nallava mathri pesana nanga nambuvama ponga pa poi banner vakiruthukkum sticker otruthukkum plan pannanunga

    ReplyDelete
  22. ரொம்பதான் அக்கரை முதல்வருக்கு,,.

    ReplyDelete
  23. 20.12.15 tet anaivarum vanga any news no comment pls call 9943228971

    ReplyDelete
  24. Ella jobyam konjam thirubi parugga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி