13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2016

13,000 ஊழியர்கள் இன்று விடுப்பு

தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்கள், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்துவதால், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட வருவாய் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'வருவாய் துறையில் காலியாக உள்ள, 7,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்;ஊதிய குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்;தேர்தல் பிரிவு தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.


அரசு பேச்சு நடத்தி, கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ஓராண்டு ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த சங்கத்தினர், தமிழகம் முழுவதும், இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி