தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியிட தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2016

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியிட தடை

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு, நாளை நடக்கும் தேர்வின் முடிவை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் வழக்கு சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் என, பல மாவட்டங்களைச் சேர்ந்த, 51 பொறியாளர்கள் சேர்ந்து, தாக்கல் செய்த மனு:நாங்கள், பட்டதாரி பொறியாளர்கள்; எங்களை, 'அப்ரன்டிஸ்' பயிற்சிக்கு, மின் வாரியம் தேர்ந்தெடுத்தது.


கடந்த, 2010 முதல், 2015 வரையான காலகட்டங்களில், 'அப்ரன்டிசாக' பணியாற்றி உள்ளோம். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் பிரிவுக்கு என, மொத்தம், 375 உதவிப்பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் படி, 2015 டிசம்பரில், மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதனால், 'அப்ரன்டிஸ்' முடித்தவர்களும், எழுத்துத் தேர்வு எழுத வேண்டியதுள்ளது.சட்டப்படி, 'அப்ரன்டிஸ்' ஆக பணியாற்றியவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க, முதலில், ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். அவர்களை பணி நியமனம் செய்து விட்டு, மீதி உள்ள காலியிடங்களுக்கு, வெளியில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.'அப்ரன்டிஸ்'களுக்கு வாய்ப்பு எனவே, 'அப்ரன்டிஸ்' ஆக பணியாற்றியவர்களுக்கு, எழுத்துத் தேர்வில் விலக்கு அளிக்கும்படி மனுக்கள் அனுப்பினோம்; எந்த பதிலும் இல்லை.

எழுத்துத் தேர்வில், 'அப்ரன்டிஸ்' முடித்தவர்கள்கலந்து கொள்ள வேண்டும் என்பது சட்ட ரோதமானது; எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். 'அப்ரன்டிஸ்' முடித்தவர்களை தேர்வு செய்ய திட்டம் வகுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, மேலும், 31 பேர் சேர்ந்து, தனியாக தாக்கல் செய்த மனுவில், பயிற்சிபெற்றவர்களுக்கு ஆதரவான, உயர் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர்.

இம்மனுக்கள், நீதிபதி கல்யாணசுந்தரம் முன், விசாரணைக்கு வந்தன. 'ஜன., 31ல் நடக்க உள்ள எழுத்துத் தேர்வில், மனுதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும். பிப்., 16 வரை, தேர்வின் முடிவுகளை, மின் வாரியம் வெளியிடக் கூடாது' என, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.விசாரணையை, பிப்., 16க்கு தள்ளிவைத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும், நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி