நீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2018

நீட் தேர்வு வயது வரம்பு: மாணவர்கள் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நீட் தேர்வை எழுதுவதற்கான வயது வரம்பை சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 17 ஆகும்.
அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 25ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மற்றும்இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்சவயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்த்தப்படும். அதாவது அவர்கள் 30 வயது வரை நீட் தேர்வை எழுதலாம்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25என நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து சில மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பை 25 என நிர்ணயித்து சி.பி.எஸ்.இ. எடுத்த முடிவில் தலையிட முடியாது என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி