டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்... சிபிஎஸ் இ தேர்வில் தமிழக மாணவர்கள் கலக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2018

டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்... சிபிஎஸ் இ தேர்வில் தமிழக மாணவர்கள் கலக்கல்

மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது.இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல்நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

சிபிஎஸ்இ தேர்வில் மேக்னா ஸ்ரீவத்சா என்ற மாணவி 500க்கு 499 பெற்று முதலிடத்திலுள்ளார். சிபிஎஸ்ஏ மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த வருடம் இந்தியா முழுவது பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 83.01%.மாக உள்ளது. திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிக தேர்ச்சி விகிதம் (97.32% ) பெற்று முதலிடத்தில் உள்ளது.தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதுசென்னை மண்டலத்தில் (93.87%) தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் (89%) டெல்லி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி